மழைநீர் கால்வாய் சேதம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில், சாலையோரம் கான்கிரீட் தளத்துடன் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. சாலையின் தரைமட்டத்தில் உள்ள இக்கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப், சேதமடைந்து கால்வாயில் விழுந்துள்ளது.இதனால், நடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, உடைந்து கிடக்கும் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், ஓரிக்கையில் சிமென்ட் சிலாப் உடைந்ததால், திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் மீது புதிதாக சிமென்ட் சிலாப் போட்டு மூட நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.