உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக இருந்த, செல்வகுமார் என்பவர், தமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சி குழு இணை இயக்குனராக இடமாறுதலில் சென்றார்.அவருக்கு பதிலாக, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்க இணை இயக்குனராக இருந்த ஜெயகுமார் என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார்.அவர், நேற்று, கலெக்டரின் சந்திப்பிற்கு பின், திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்