உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோரைபுல் வளர்ந்துள்ள கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

கோரைபுல் வளர்ந்துள்ள கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

சிட்டியம்பாக்கம்,:வாலாஜாபாத் ஒன்றியம், இலுப்பபட்டு ஊராட்சி, சிட்டியம்பாக்கம் கிராமத்தில், கடந்த 2021-22ம் ஆண்டு, ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், 169 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் கால்வாய் அமைக்கப்பட்டது.இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம், முறையாக பராமரிக்காததால், கால்வாயில் நீர்வழித்தட பாதையில், கோரைபுற்கள் புதர்போல வளர்ந்துள்ளன. இதனால், மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க இலுப்பபட்டு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை