உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் மண்டபத்தில் செடிகள் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்

கோவில் மண்டபத்தில் செடிகள் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நான்கு கால் மண்டபத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்றது ஏகாம்பரநாதர் கோவில். இதன் பிரதான ராஜ கோபுரத்திற்கும், 16 கால் மண்டபத்திற்கும் இடையே, நான்கு கால் மண்டபம் உள்ளது.அழகிய புடைப்பு சிற்பங்கள் நிறைந்த இம்மண்டபத்தை, கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மண்டபத்தின் கூரையில் அரசமர செடிகள் முளைத்துள்ளன.செழித்து வளரும் இச்செடிகளின் வேர்களால், நான்கு கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாவதுடன், நாளடைவில் மண்டபம் முற்றிலும் வலுவிழந்து, இடிந்து விழும் அபாயம் உள்ளது.எனவே, நான்கு கால் மண்டபத்தில் வளர்ந்து வரும் அரசமர செடிகளை வேருடன் அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை