உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

காஞ்சிபுரம், வெவ்வேறு இடங்களில், கஞ்சா மற்றும் குட்கா போதை பொருட்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் அடுத்த, களினுார் கிராமம், பஜனைக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண், 25; நேற்றுமுன்தினம், வள்ளுவப்பாக்கம் கிராமத்தில், கஞ்சா விற்ற வரை வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அதேபோல, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால், 49; இவர், புதுப்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்தார். அவரை கைது செய்த சிவகாஞ்சி போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை