உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ - வீலரில் சென்றவர் மரத்தில் மோதி பலி

டூ - வீலரில் சென்றவர் மரத்தில் மோதி பலி

ஒரகடம், :குன்றத்துார் அடுத்த, திருவேம்புதேரி ஹரிஸ் நகரைச் சேர்ந்தவர் சக்தி சிவகுமார், 43, தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன் தினம், இரவு 10:00 மணி அளவில் திருவேம்புதேரி கிராமத்தில் இருந்து, ஒரகடம் நோக்கி, 'ஹீரோ யூனிக்கான்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.ஒரகடம் அருகே, சாலையோர மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்ட ஒரகடம் போலீசார், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை