உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உதயமாங்குளத்தை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

உதயமாங்குளத்தை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

ஓரிக்கை,:காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து, சதாவரம் செல்லும் சாலையோரம் உதயமாங்குளம் உள்ளது. அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இக்குளத்து நீரை அப்பகுதியினர், 50 ஆண்டுகளுக்கு குடிநீராக பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் குப்பை கொட்டப்பட்டும் செடிகள், கோரை புற்கள் வளர்ந்துள்ளன.மேலும், குளத்திற்கு மழை நீர் செல்லும் கால்வாயில், முறைகேடாக கழிவுநீர் செல்வதால், குளத்து நீர் பாசி படர்ந்து, மாசடைந்த நிலையில் உள்ளது.இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடையும் சூழல் உள்ளது. எனவே, குளத்தில் கழிவுநீர் விடுவதை தடை செய்து, உதயமாங்குளத்தை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை