உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்நடை குடிநீர் தொட்டிக்கு குழாய் அமைக்க வலியுறுத்தல்

கால்நடை குடிநீர் தொட்டிக்கு குழாய் அமைக்க வலியுறுத்தல்

ஏனாத்துார்:வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துார் ஊராட்சி கவுரியம்மன்பேட்டையில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில். கடந்த 2018 - 19ல் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.ஆனால், கால்நடை தொட்டியில் தண்ணீர் நிரப்ப குடிநீர் குழாய் வசதி அமைக்கப்படவில்லை. இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாமல், குடிநீர் தொட்டி வீணாகி வருகிறது.எனவே, கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் ஏற்படுத்த ஏனாத்துார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவுரியம்மன்பேட்டை கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி