உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு, என்.எஸ்.கே., நகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய், ஹரிஹந்த் அவென்யூ குடியிருப்பையொட்டி செல்கிறது. முறையான பராமரிப்பு இல்லாதததால், கால்வாயில் ஆங்காங்கே மண் திட்டுகளாலும், கோரைபுற்கள் வளர்ந்துள்ளதாலும், கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ