உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண் திட்டுகளால் துார்ந்த பாலம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

மண் திட்டுகளால் துார்ந்த பாலம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் கோகுலம் வீதியில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் கீழ் உள்ள நீர்வழித்தடத்தில் குப்பை குவியலாலும், மண்திட்டுகளாலும் துார்ந்து உள்ளது.இதனால், பலத்த மழை பெய்தால், சிறுபாலம் வழியாக செல்ல வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், சிறுபாலத்தின் நீர்வழித்தட பாதையை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ