உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேணுகோபால சுவாமிக்கு நாளை திருக்கல்யாணம்

வேணுகோபால சுவாமிக்கு நாளை திருக்கல்யாணம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் கிராமத்தில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ராம நவமி முன்னிட்டு, பத்து நாள் உத்சவம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி கடந்த 6ம் தேதி, ராம நவமியை முன்னிட்டு, வேணுகோபால சுவாமிக்கு முதல் நாள் உத்சவம் துவங்கியது. தினசரி வேணுகோபால சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.பத்தாவது நாளான நாளைக்கு, வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இந்த கல்யாண உத்சவத்தை முன்னிட்டு, இரவு 10:00 மணிக்கு, திருமண சீர்வரிசை புறப்பாடு. அதை தொடர்ந்து வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாணம் உத்சவம் மற்றும் வீதியுலா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !