உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உயர்மட்ட தரைப்பாலம் எப்போது? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

உயர்மட்ட தரைப்பாலம் எப்போது? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம், மதுரமங்கலம் அடுத்த, அக்கமாபுரம் கிராமத்தில் இருந்து, நாகப்பட்டு கிராமம் வழியாக, பள்ளூர் - சோகண்டி சாலையை இணைக்கும் பிரதான சாலை உள்ளது.இந்த சாலை வழியாக, அக்கமாபுரம், கண்டிகை, துளசாபுரம் ஆகிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பூ மற்றும் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி சென்று, காஞ்சிபுரம் பகுதிக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இந்த சாலையின் குறுக்கே, பரந்துார் ஏரி கலங்கலில் இருந்து வெளியேறும் தண்ணீர், ஏகனாபுரம் ஏரிக்கு செல்கிறது. இந்த ஓடையை கடந்து தான், காஞ்சிபுரத்தில் இருந்து அக்கமாபுரம் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.மழைக்காலத்தில், பரந்துார் ஏரி மற்றும் பிற ஏரி உபரி தண்ணீர் செல்லும் போது, இந்த ஓடையில் இடுப்பளவிற்கு தண்ணீர் செல்கிறது.இதனால், அக்கமாபுரம், கண்டிகை, துளசாபுரம் கிராமத்தினர், எடையார்பாக்கம், மேலேரி ஆகிய கிராமங்களின் வழியாக சென்று, காஞ்சிபுரம் செல்ல வேண்டி உள்ளது.எனவே, அக்கமாபுரம் - நாகப்பட்டு சாலை இடையே செல்லும் ஓடையில், சிறிய தரைப்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை