மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
அஞ்சுகிராமம்:சென்னை கோர்டில் சரணடைந்த டவுன் பஞ்., துணை தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்ட நான்கு பேர் நாகர்கோவிலில் ஆஜர்படுத்தப்பட்டனர். அஞ்சுகிராமம் டவுன் பஞ்., துணை தலைவர் ஏசுஅமலதாசன் (39) கடந்த ஜூன் 13ம் தேதி ஒரு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரஜகிருஷ்ணபுரம் ரவிமணி மகன் ஜெகன், சீனிவாசன், சங்கர், அதே ஊர் பாண்டியன் மகன் பாக்கியராஜ், சந்திரன், கண்ணன், பால்பாஸ்டின், ரெஞ்சிதம் ஆகிய 8 பேர் மீதும் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதில் சந்திரன், கண்ணன், பால்பாஸ்டின் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜெகன், சீனிவாசன், சங்கர், பாக்கியராஜ் ஆகிய 4 பேரும் சென்னை கோர்டில் சரணடைந்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் கோர்டில் நடப்பதால் சென்னையில் சரணடைந்த நான்கு பேரும் நாகர்கோவில் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக கோர்டில் சரணடைந்தவர்களை போலீஸ் காவலில் எடுக்க அஞ்சுகிராமம் போலீசார் மனு செய்துள்ளனர். 8 பேர் அடங்கிய கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் சரணடைந்துள்ளனர். ஒரு பெண் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025