மேலும் செய்திகள்
குரு வார வழிபாடு
17-Oct-2025
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் அருகே புதுப்பாடியைச் சேர்ந்தவர் ஏலியாம்மா 82. நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் பகுதியில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற ஒரு இளைஞர் வீட்டுக்குள் பாம்பு புகுந்துள்ளதாக கூறினார். இதனால் பயந்து போனவர் நாற்காலியில் இருந்து இறங்கி வீட்டின் முன் வந்துள்ளார். பாம்பை காண்பித்து தருவதாக கூறி அங்கும் இங்கும் சென்ற வாலிபர் திடீரென ஏலியாம்மாவின் கழுத்தில் கிடந்த ஒன்றரைப் பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதில் கீழே விழுந்த ஏலியம்மாவின் தலையில் காயம் ஏற்பட்டது. கோதமங்கலம் போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நகை பறித்தவர், மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹஸ்மத் 27, என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
17-Oct-2025