பணிக்கு சென்ற எஸ்.எஸ்.ஐ., திடீர் மாயம்
நாகர்கோவில்:குழித்துறை அருகே பணிக்கு சென்ற எஸ்.எஸ்.ஐ., மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே செங்கன்முலா பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், 47. அருமனை ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ.,யான இவர், ஆக., 31ல் வேலைக்கு செல்வதாக புறப்பட்டு சென்றார். அதன் பின், அவர் வீடு திரும்பவில்லை. மனைவி சிமி, அவரது மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது, 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. எட்டு நாட்கள் ஆன நிலையில், லட்சுமணன் எங்கு சென்றார் என, அருமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.