உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கொத்தனார் மர்ம மரணம் வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது *8 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் நடவடிக்கை

கொத்தனார் மர்ம மரணம் வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது *8 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் நடவடிக்கை

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கொத்தனார் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் அவரது மனைவியும் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மடிச்சல் நுள்ளிக்காட்டுவிளையைச் சேர்ந்த கொத்தனார் சிவக்குமார் 35. இவரது மனைவி ஷீஜா 21. இரு மகன்கள் உள்ளனர். 2017 அக்., 14 சிவக்குமார் மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் இறந்து கிடந்தார். அவரது தாயார் சாந்தா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடற்கூறு ஆய்வு முடிவில் அவரது நான்கு விலா எலும்புகளில் காயமும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததும் தெரிய வந்தது.இந்நிலையில் எஸ்.பி., ஸ்டாலின் சந்தேக மரணங்கள் தொடர்பான வழக்குகள் விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து சிவக்குமார் இறந்த வழக்கையும் போலீசார் சில நாட்களாக தீவிரமாக விசாரித்தனர். அப்போது தான் ஷீஜாவும் அவரது கள்ளக்காதலன் ஏழிலும் சேர்ந்து சிவக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 8 ஆண்டுகளுக்கு பின் இருவரும் கைது செய்யப்பட்டனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஷுஜாவின் கள்ளக்காதல் விவகாரம் சிவக்குமாருக்கு தெரியாது. அவர் குடிபோதையில் தினமும் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்ததால் ஷீஜாவுக்கு அவர் மீது வெறுப்பு இருந்தது. இதனால் கள்ளக்காதலன் எழிலுடன் சேர்ந்து சிவக்குமாரை கொலை செய்ய ஷீஜா திட்டமிட்டார். சம்பவத்தன்று வழக்கம்போல் குடிபோதையில் வந்து சிவக்குமார் ஷீஜாவிடம் தகராறு செய்தார். எழிலை வீட்டுக்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து தாக்கி தலையணையால் சிவக்குமாரின் முகத்தில் அமுக்கி கொலை செய்தனர். அவர் தற்கொலை செய்ததாக ஷீஜா அழுது புரண்டு அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.கணவர் இறந்த சில நாட்களுக்குள் ஷீஜா மகிழ்ச்சியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனிக்குடித்தனமும் நடத்தினார். இந்த தகவல் விசாரணையில் தெரிந்து கைது செய்தோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ