உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையின் குறுக்கே ஓடிய ஆடுகள்: பைக்கில் இருந்து விழுந்த சிறுமி பலி

சாலையின் குறுக்கே ஓடிய ஆடுகள்: பைக்கில் இருந்து விழுந்த சிறுமி பலி

சாலையின் குறுக்கே ஓடிய ஆடுகள்: பைக்கில் இருந்து விழுந்த சிறுமி பலிகரூர், டிச. 25-கரூர் மாவட்டம், சோமூர் முத்தமிழ்புரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன், 35; இவர் கடந்த, 22 மதியம், மகள் ரித்திகா,11; என்பவருடன், ஸ்பெலண்டர் பிளஸ் பைக்கில், திருமாகூடலுார்-சோமூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் குறுக்கே ஆடுகள் ஓடின. இதனால், பைக் நிலை தடுமாறியதில் கண்ணதாசனும், ரித்திகாவும் கீழே விழுந்தனர். ரித்திகாவுக்கு தலையில் பலத்த அடிப்பட்டு உயிரிழந்தார். கண்ணதாசனுக்கு காயம் ஏற்பட்டது. வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !