உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்துர்நாற்றம் வீசுவதால் தொற்று அபாயம்

திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்துர்நாற்றம் வீசுவதால் தொற்று அபாயம்

திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்துர்நாற்றம் வீசுவதால் தொற்று அபாயம்கரூர்: கரூர், மினி பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில், சாக்கடை கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக திறந்த நிலையில் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர் மனோகரா கார்னர் பகுதியில், மினி பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. அங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம், சுற்று வட்டார பகுதிகளுக்கு பயணிகள் ஏற்றி செல்லப்படுகின்றனர். மினி பஸ் ஸ்டாண்ட் பின்புறம், காய்கறி மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள் உள்ளன.இந்நிலையில், மினி பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதியில், சாக்கடை கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக திறந்த நிலையில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, கரூரில் மழை பெய்து வரும் நிலையில், சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் சாலையில் மழை நீருடன் ஓடியபடி உள்ளது. இதனால், மினி பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.மினி பஸ் ஸ்டாண்ட் செல்லும் பொது மக்கள், மாணவ, மாணவியர், சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர். எனவே, சாக்கடை கழிவுநீர் கால்வாயை சீரமைத்து மூட, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி