மேலும் செய்திகள்
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
25-Jan-2025
குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகைகரூர், :குடியரசு தின விழாவையொட்டி, கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது.நாளை நாடு முழுவதும், குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான, ஏற்பாடுகள் நாடு முழுவதும் நடந்து வருகிறது.கரூர் மாவட்ட, அரசு விளையாட்டு மைதானத்தில் நாளை, தேசிய கொடியை, கலெக்டர் தங்கவேல் ஏற்றி வைக்க உள்ளார். பிறகு, போலீசார் அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. அதற்காக, நேற்று காலை ஆயுதப் படை மைதானத்தில், 25க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார், அணிவகுப்பு மரியாதைக்கான பயிற்சியில் ஈடுபட்டனர்.
25-Jan-2025