மாநில கேரம் போட்டிகரூர் அணிக்கு வீரர்கள் தேர்வு
மாநில கேரம் போட்டிகரூர் அணிக்கு வீரர்கள் தேர்வுகரூர்:மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்கும் வகையில், கரூர் மாவட்ட அணிக்கு, பரணி பார்க் பள்ளியில் நாளை (31ல்) வீரர்கள் தேர்வு நடக்கிறது.இதுகுறித்து, கரூர் மாவட்ட கேரம் சங்க சேர்மன் மோகனரங்கன், தலைவர் ராம சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு கேரம் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட கேரம் சங்கம் சார்பில், 64வது மாநில அளவிலான சப்-ஜூனியர் மற்றும் கேடட் கேரம் சாம்பியன் ஷிப் போட்டிகள் வரும் பிப்., 7, 8, 9 ஆகிய தேதிகளில் சேலம் ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.அதில், பங்கேற்கும் வகையில் கரூர் மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நாளை காலை, 9:00 மணிக்கு பரணி பார்க் பள்ளியில் நடக்கிறது. எனவே, கரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் சப்-ஜூனியர் பிரிவில் விளையாட, 10.2.2011 அன்றோ அல்லது அதன் பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.கேடட் பிரிவில் விளையாட, 10.02.2013 அன்றோ அல்லது அதன் பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட கேரம் சங்க பொருளாளர் செந்தில் குமாரை, 97509-91014 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.