உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாடியில் இருந்து விழுந்தவட மாநில வாலிபர் பலி

மாடியில் இருந்து விழுந்தவட மாநில வாலிபர் பலி

மாடியில் இருந்து விழுந்தவட மாநில வாலிபர் பலிகரூர்:கரூர் அருகே, இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த, வட மாநில வாலிபர் உயிரிழந்தார்.மேற்கு வங்காளம், வடக்கு பர்னாஸ் பகுதியை சேர்ந்தவர் பிகாஷ்தாஷ், 27; இவர், கரூர் அருகே, நரிகட்டியூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 9ல் வீட்டின் இரண்டாவது மாடியில், பிகாஷ்தாஷ் அமர்ந்து கொண்டு மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்த பிகாஷ்தாஷ், தலையில் அடிபட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பிகாஷ்தாஷ் உயிரிழந்தார்.பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ