உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவுகரூர்:சென்னையில் உள்ள, டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த சென்று கைதான, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலையை விடுதலை செய்யக்கோரி, கரூரில் பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, எஸ்.ஐ., நாகராஜன் புகார் செய்தார். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் செல்வராஜ் உள்பட, 67 பேர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி