மேலும் செய்திகள்
திருக்குறள் கூட்டமைப்பு கூட்டம்
01-Apr-2025
உலக திருக்குறள் கூட்டமைப்புமாவட்ட நிர்வாகிகள் கூட்டம்கரூர்:உலக திருக்குறள் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு கூட்டம், தலைவர் தங்கராசு தலைமையில் நேற்று ராமானுாரில் நடந்தது.அதில், தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, யோகா வையாபுரியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, முதல் வகுப்பு மாணவ, மாணவியருக்கு உரைவள நுால் வழங்க வேண்டும், வீடுகளில் வாழ்வியல் சடங்குகளை, திருக்குறள் முறையில் நடத்த வேண்டும் உள்ளிட்ட, முடிவுகள் எடுக்கப்பட்டன.கூட்டத்தில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, கவிஞர் செல்வம், திருக்குறள் பயிற்றுனர் நித்யானந்தம் உள்பட, பலர் பங்கேற்றனர்.
01-Apr-2025