மேலும் செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரருக்குதிருக்கல்யாண உற்சவம்
10-Apr-2025
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்ஆளும் பல்லக்கு உற்சவம்கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, ஆளும் பல்லக்கு உற்சவம் நடந்தது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது.அதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா, சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, கோவிலில் ஆளும் பல்லக்கு உற்சவம் நடந்தது. பசுபதீஸ்வரர், அலங்கார வள்ளி, சவுந்திர நாயகி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இன்று வெள்ளி வாகனத்தில், உற்சவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
10-Apr-2025