மேலும் செய்திகள்
கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாய தொழிலாளர்கள்
06-Aug-2025
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், விவசாயிகள் காய்கறி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.சிவாயம், இரும்பூதிப்பட்டி, பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, வடுகப்பட்டி, பஞ்சப்பட்டி, கணக்கப்பிள்ளையூர், கந்தன்குடி, மகிளிப்பட்டி, உடைந்தோட்டம், சேங்கல் ஆகிய கிராமங்களில் அதிகளவில் வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகளில் வெண்டைக்காய்கள் காய்த்து வருகின்றன. காய்கள் பறிக்கப்பட்டு கரூர், குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் உழவர் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். வெண்டைக்காய் கிலோ, 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
06-Aug-2025