மாநகராட்சி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர், கரூர் மாநகராட்சி அலுவலகம் முன் நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், கரூர் மாநகராட்சி கமிஷனரின் ஊழியர்களுக்கு எதிரான போக்கை கண்டித்தும், அதை கைவிட கோரியும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் பிச்சைமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.