கரூரில் வரும் 7 ம் தேதிவிவசாயிகள் குறைதீர் கூட்டம்
கரூரில் வரும் 7 ம் தேதிவிவசாயிகள் குறைதீர் கூட்டம்கரூர்:கரூரில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 7ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (7ம் தேதி) காலை, 11:00 மணியளவில் நடக்கிறது. விவசாயிகள், விவசாய சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மனுக்கள் மட்டும் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.