உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொத்தமல்லி சாகுபடி தீவிரம்

கொத்தமல்லி சாகுபடி தீவிரம்

கொத்தமல்லி சாகுபடி தீவிரம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கொத்தமல்லி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குழந்தைப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, புனவாசிப்பட்டி, அந்தரபட்டி, கணக்கம்பட்டி, பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது கொத்தமல்லி பசுமையாக வளர்ந்து வருகிறது. இவை பறிக்கப்பட்டு உள்ளூர் சந்தைகள் மற்றும் கரூர், திருச்சி மார்க்கெட்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது. சிறிய கட்டு கொத்தமல்லி, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ