உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பட்டாசு தீ பொறி பட்டதில் குடிசை வீட்டில் தீ விபத்து

பட்டாசு தீ பொறி பட்டதில் குடிசை வீட்டில் தீ விபத்து

கரூர், கரூர் அருகே, துக்க நிகழ்ச்சியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு தீ பொறி பட்டு, குடிசை வீட்டில் தீ பிடித்தது.கரூர் மாவட்டம், ஆத்துார் சமத்துவபுரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் சதீஷ், 32. நேற்று மதியம் அதே பகுதியில், துக்க நிகழ்ச்சிக்காக சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது, பட்டாசு தீ பொறி பட்டத்தில் சதீஷின் வீட்டு கூரையில் தீப்பிடித்தது. கரூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் திருமுருகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ