உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரி குடிநீர் குழாய் விரிசலால் வீணாகும் தண்ணீர்

காவிரி குடிநீர் குழாய் விரிசலால் வீணாகும் தண்ணீர்

கிருஷ்ணராயபுரம், மேட்டுப்பட்டி சாலையில் உள்ள, காவிரி குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் சாலையோரத்தில் வீணாக சென்றது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டுப்பட்டி சாலை வழியாக வரகூர் பகுதிக்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடக்கிறது. தற்போது மேட்டுப்பட்டி சாலையோர பகுதியில், காவிரி குடிநீர் செல்லும் குழாய் அழுத்தம் காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான தண்ணீர் வீணாகி சாலையோரம் உள்ள பள்ளத்திற்கு சென்று வருகிறது. இதனால் காவிரி நீர் குறைந்தளவு மட்டுமே வரகூர் பகுதிக்கு செல்கிறது. எனவே, விரிசல் அடைந்த குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ