28ல் மனுநீதி நாள் முகாம்
கரூர்: 'வரும், 28ல் கூடலுார் கீழ்பாகத்தில் மனுநீதி நாள் முகாம் நடக்கி-றது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், சின்-னதாராபுரம் அருகே, கூடலுார் கீழ்பாகத்தில் வரும், 28 மாலை, 4:00 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. பல்வேறு அரசுத்-துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் குறித்து, பொதுமக்களுக்கு கூற உள்ளனர். மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்-காட்சி ஆகியவை நடக்கவுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்-டுள்ளது.