உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேல்நிலை குடிநீர் தொட்டிகேட்டு கலெக்டரிடம் மனு

மேல்நிலை குடிநீர் தொட்டிகேட்டு கலெக்டரிடம் மனு

கரூர்:மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என, வரவணை பஞ்., தலைவர் கந்தசாமி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: வரவணை பஞ்சாயத்துக்குட்பட்ட, பாப்பனம்பட்டியில் அதிகம் பேர் வசித்து வருவதால், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி தர வேண்டும். இது தொடர்பாக பல முறை கோரிக்கை வைக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க முன்வர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ