உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.3.62 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.3.62 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. ஓய்வூ-தியம், வங்கி கடன், இலவச வீட்டுமனை பட்டா, வேலை-வாய்ப்பு, உதவி உபகரணங்கள் கேட்பது உள்பட, 556 மனுக்-களை மக்கள் வழங்கினர். மாற்றுத் திறனாளிகளிடம், 38 மனுக்கள் பெறப்பட்டது. பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ஏழு பேருக்கு, 62 ஆயிரத்து, 550 ரூபாய் மதிப்பில் சக்கர நாற்காலிகள், நீரில் மூழ்கி இறந்த மூவரின் வாரிசுதாரர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியாக தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் காசோலை என பத்து பேருக்கு, 3.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்-பட்டன.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சப்-க-லெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !