பயனற்ற நிலையில் பொது கழிப்பிடம்
கரூர்: கரூர், எஸ்.வெள்ளாப்பட்டி பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி முட்புதர்கள் முளைத்துள்ளன. இதனால், அப்பகுதி மக்கள், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.