உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணை அருகே 500 கிலோ மீன் விற்பனை

மாயனுார் கதவணை அருகே 500 கிலோ மீன் விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. இதில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. வளர்க்கப்படும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கரூர், புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி, திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை அதிகளவில் வாங்கி சென்றனர். நேற்று, 500 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ