நீட் தேர்வில் 17 வது இடம்; மாணவிக்கு பாராட்டு
கரூர்: குளித்தலை அருகே நாடக்காப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி மகள் புனிதலட்சுமி. இவர் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார். பின், நீட் தேர்வில், 627 மதிப்பெண்கள் பெற்று, 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் மாநில அளவில், 17 வது இடத்தை பிடித்தார். கரூரில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர், மாணவியை நேரில் அழைத்து பாரட்டி பரிசு வழங்கினார்.