உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சூதாடிய 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

சூதாடிய 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

குளித்தலை: குளித்தலை அடுத்த வெடிகாரநாயக்கனுார் ஆற்றுவாரியில், பணம் வைத்து சூதாடுவதாக பாலவிடுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு சம்பவ இடத்தை சுற்றி வளைத்த போலீசார், அங்கு பணம்வைத்து சூதாடிய பாளையத்தை சேர்ந்த ராஜவேல், 27, முசிறி, காந்திநகர் பாலாஜி, 45, மணப்பாறை கிரிஸ்துராஜ், 45, சுக்காம்பட்டி ஜனாந்த் ஆகிய, நான்கு பேரை பிடித்தனர். அப்போது, ஜனாந்த் தப்பி ஓடினார். மூன்று பேரை கைது செய்த போலீசார், தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !