மாநில மல்யுத்தம் 300 பேர் பங்கேற்பு
மாநில மல்யுத்தம்300 பேர் பங்கேற்புகரூர், டிச. 2-கரூர் மாவட்டம், நடையனுாரில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடந்தது. இதனை, கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிக்கு நடுவர்களாக கணேசன், கார்த்திக் உள்ளிட்டோர் செயல்பட்டனர். போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு அமெ ச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.