உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை விண்ணப்பிக்க செப்.,30 கடைசி நாள்

கரூர் ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை விண்ணப்பிக்க செப்.,30 கடைசி நாள்

கரூர்: 'கரூர், ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, செப்.,30 கடைசி நாள்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில், மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்பு- பயிற்சி காலம்- ஒரு ஆண்டு. இதில், சேர்வதற்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகை, சைக்கிள், வரைபடக் கருவிகள், பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் அரசால் வழங்கப்படும். வரும், செப்.,30 விண்ணப்-பிக்க கடைசி நாளாகும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களை, முதல்வர் தொலை-பேசி 04324 -222111, 9499055711, 9499055712 வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி