உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் அழகுக்கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

கரூரில் அழகுக்கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

கரூர், ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்காரம் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தனியார் நிறுவனத்துடன் இணைந்து அழகுக்கலை, சிகை அலங்காரம் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு, 8 முதல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு, 3 லட்சம் இருக்க வேண்டும். www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !