அங்கன்வாடி பணியாளர்கள் 4வது நாளாக போராட்டம்
கரூர்: கரூர் அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, நான்காவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில், பென்சன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும் என, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று நான்காவது நாளாக, மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பத்மாதேவி தலைமையில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.