உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர் அருகே பூக்குழி திருவிழா ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோவிலில், ஐயப்ப சேவா சங்கம் அறக்கட்டளை மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில் கடந்த, 26ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பூக்குழி திருவிழா தொடங்கியது. கடந்த, 28ல் ஊரணி காளி-யம்மன் கோவில் வளாகத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, நெய்விளக்கு ஏற்றுதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூக்கு-ழியில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் இறங்கினர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை