உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்,வெள்ளை பூசணி விற்பனை ஜோர்

ஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்,வெள்ளை பூசணி விற்பனை ஜோர்

கரூர்:ஆயுதபூஜையையொட்டி, வெள்ளை பூசணி, வாழைத்தார் விற்பனை நேற்று ஜோராக நடந்தது.ஆயுத பூஜையையொட்டி, வெள்ளை பூசணி கரூரில் விற்பனைக்கு குவிந்துள்ளது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது. அப்போது வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் திருஷ்டி பரிகாரத்துக்காக நீர்ப்பூசணி என அழைக்கப்படும் வெள்ளை பூசணியை கட்டுவது வழக்கம். மேலும், சிலர் வெள்ளை பூசணியை திருஷ்டி கழித்து, சாலையில் உடைப்பர்.இதனால், வெள்ளை பூசணி கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு அதிகளவில் வந்துள்ளது. கரூர் மாவட்டத்தில், வெள்ளை பூசணி சாகுபடி அதிகளவில் இல்லை. இதனால், திண்டுக்கல், அரியலுார், தேனி மாவட்டங்களில் இருந்து வெள்ளை பூசணி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ, 25 முதல், 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.* ஆயுத பூஜையையொட்டி, நேற்று கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், வாழைத்தார்கள் விற்பனைக்கு குவிந்தது. பூவன் தார், 600 ரூபாய், கற்பூரவள்ளி, 500 ரூபாய், ரஸ்தாளி, 450 ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை