உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சீரான விலையில் வாழைத்தார் விற்பனை

சீரான விலையில் வாழைத்தார் விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி, கருப்பத்துார், பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார் வரத்து அதிகரித்ததால், சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதில், பூவன் வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை