உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில், நேற்று வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகாதானபுரம், பொய்-கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் வாழை சாகு-படி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார், 250 ரூபாய், கற்பூர-வள்ளி வாழைத்தார், 150 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 300 ரூபாய்க்கு விற்கப்-பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ