உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலம் கட்டுமான பணி நிறைவு இணைப்பு சாலை இல்லாததால் அவதி

பாலம் கட்டுமான பணி நிறைவு இணைப்பு சாலை இல்லாததால் அவதி

கரூர், ஜன. 3-கரூர் அருகே, வடிகால் கால்வாய் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், இணைப்பு சாலை அமைக்காததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-, கலெக்டர் அலுவலகம் அருகில் சத்தியமூர்த்தி நகர் பிரிவு சாலையில், மழைநீர் வடிகால் கால்வாய் மேல்பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது, பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால், பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் புதிய பாலத்தின் மேல் பகுதியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் தார்ச்சாலைகளும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, புதிய பாலத்தையொட்டி, உடனடியாக இணைப்பு சாலை அமைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ