மேலும் செய்திகள்
வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்ற முதியவர் பலி
19-Apr-2025
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகில் காரும், டூவீலரும் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகில் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பரமானந்தம், 75. இவர் நேற்று முன்தினம், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுப்பாளையம் அருகில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த கார் மோதியதில் பரமானந்தம் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Apr-2025