உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாரி உரிமையாளருக்கு மிரட்டல் வி.சி.க., நிர்வாகி மீது வழக்கு

லாரி உரிமையாளருக்கு மிரட்டல் வி.சி.க., நிர்வாகி மீது வழக்கு

லாரி உரிமையாளருக்கு மிரட்டல்வி.சி.க., நிர்வாகி மீது வழக்குகரூர், டிச. 8-கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சேகர், 41; டாரஸ் லாரி உரிமையாளர். இவரது, டாரஸ் லாரியை கடந்த, 4 ல் டிரைவர் பழனிசாமி, கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சி மண்டல விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ராஜா, 42; கார்த்திகேயன், 37; உள்பட, ஆறு பேர் டூவீலரில் சென்று டாரஸ் லாரியை வழிமறித்து நிறுத்தினர்.பிறகு, டாரஸ் உரிமையாளர் சேகரை வரவழைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிதியாக, 30 ஆயிரம் ரூபாயை, ராஜா உள்ளிட்டவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், டாரஸ் லாரி உரிமையாளர் சேகர், 4,000 ரூபாயை ஜி-பே மூலம் அனுப்பியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ராஜா உள்ளிட்டவர்கள், டாரஸ் லாரி உரிமையாளர் சேகரை, தகாத வார்த்தை பேசி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, சேகர் அளித்த புகாரின்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் ராஜா உள்பட, ஆறு பேர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை