கணவனுக்கு கத்திக்குத்து மனைவி மீது வழக்கு
கரூர், ஜூன் 10கரூரில், கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனை கத்தியால் குத்திய, மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர், அண்ணாநகர் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார், 32. இவருடைய மனைவி பிரியதர்ஷினி, 24. இந்நிலையில், பிரியதர்ஷினிக்கு, வேறு ஒரு நபருடன் கள்ளக்காதல் இருப்பதாக தெரிகிறது.இது தொடர்பாக சரத்குமார், பிரியதர்ஷினியை பலமுறை கண்டித்துள்ளார். கடந்த, 8ல் சரத்குமாருக்கும், பிரிய தர்ஷினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, ஆத்திரமடைந்த பிரியதர்ஷினி, கத்தியால் சரத்குமாரின் வயிறு, தோளில் குத்தியுள்ளார். அதில், படுகாயமடைந்த சரத்குமார், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, சரத்குமார் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் பிரியதர்ஷினி மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.