உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கட்டளை-மாயனுார் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

கட்டளை-மாயனுார் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்: கட்டளை-மாயனுார் சாலை பல ஆண்டுகளாக, குண்டும், குழியமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.கரூர் மாவட்டம், கட்டளை-மாயனுார் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு லாரிகள் உள்பட பல்வேறு வாக-னங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில் பள்ளிகள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. காவிரியாற்றில் உள்ள, நீர்த்தேக்க கிணறுக-ளுக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்-கின்றன. இந்நிலையில், கட்டளை முதல் மாயனுார் வரை ரங்க நாதபுரம், கீழமாயனுார் உள்ளிட்ட, பல்-வேறு பகுதிகளில் சாலைகள் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்தில் சென்று வருகின்-றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடை-கின்றனர்.எனவே, கட்டளை முதல் மாயனுார் வரை, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை, தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை உடனடியாக, சீர-மைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை